பாதுகாப்புச் சபை [ தொகு ] நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. [7] இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா , பிரான்சு , உருசியா , ஐக்கிய இராச்சியம் , ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில் பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அ...
Popular posts from this blog
By
வெண்மதி(பெண் ஞானி)
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை - அனித்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளினதும் ஒன்று கூடல். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு. - நாடுகளுக்கான கட்டாயமற்ற அறிவுறுத்தல்களை வழங்கல் (ஒரு பாராளுமன்றம் அல்ல) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்தல் வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்கல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தெரிவு செய்தல்,அனைத்துலக நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளையும் தெரிதல்.
By
வெண்மதி(பெண் ஞானி)
-
எல்லாளன் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது . சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் " மகாவம்சம் . '' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது . ஆனால் , அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே , அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது . அப்படியானால் , விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது . அனுராதபுரம் இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது , அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி , அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் . விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே , அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது . விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது , தொல்பொரு...
Comments
Post a Comment